Friday, October 09, 2009

புக்கர் பரிசும் இந்தியாவும்...

1969 லிருந்து வழங்கப்பட்டு கொண்டு இருக்கும் இந்த புக்கர் பரிசானது இந்த முறை ஹில்லாரி மேண்டல் என்ற பெண்ணிற்கு “WOLF HALL" என்ற புத்தகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த பரிசானது காமன்வெல்த் நாடுகள்,அயர்லேண்ட்,ஜிம்பாவே முதலிய நாடுகளில் எழுதப்படுகின்ற முழு நீள ஒரிஜினல் ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்படுகிறது.
1969-லிருந்து புக்கர் மேக்கனால் என்ற ஃப்வுண்டேஷனால் வழங்கப்படுகிறது.
பரிசுத்தொகை 50 ஆயிரம் பவுண்டுகளாகும். புக்கர் ஃப்வுண்டேஷன் அமைக்கும் ஒரு குழு சிறந்த புத்தகத்தினை செலக்ட் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் லண்டனில் உள்ள கில்ட் ஹால் என்னும் இடத்தில் இருந்து இந்த புக்கர் அறிவிப்பு வெளிவரும்.


1981-ல் சல்மான் ருஷ்டி மும்பாயில் பிறந்தவர். அவரின் ”மிட்நைட்’ஸ் சில்ட்ரன்” என்ற புத்தகத்திற்கு புக்கர் பரிசினை வாங்கினார்.(பத்ம லெஷ்மி என்ற கேர்ள் ஃப்ரண்டுடன் நிறைய photos வந்தன.)இவரின் ”சட்டானிக் வெர்ஸஸ்” என்ற புத்தகம் பெறும் சர்ச்சையினை முஸ்லீம்களிடையே ஏற்படுத்தின.இரானின் அப்போதைய அதிபர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.


1997-ல் அருந்ததிராய் என்ற இந்திய பெண் அவரின் ”தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்”(கேரளா பற்றியது) என்ற புத்தகத்திற்கு இந்த பரிசினை வாங்கினார்.அருந்ததி ராய் NDTV-பிரணாய் ராயினின் கஸினாம்.இவருக்கும் இது தான் முதல் நாவலாம்.எழுத எடுத்துக்கொண்ட வருடங்கள் நான்கு. இவர் பிறந்தது ஷில்லாங்கில்.


2006-ல் கிரண்தேசாய் ”த இன்ஹெரிட்டன்ஸ் ஆப் லாஸ்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார்.இவர் பிறந்தது டில்லியில்.தற்சமயம் வசிப்பது அமெரிக்காவில்.இவருடைய அம்மா அனிதா தேசாயும் ஒரு எழுத்தாளர்.388 பக்கங்கள் கொண்டது இவரது நாவல்.ஹிமாலாயா பகுதியில் நடப்பது போல் உள்ளதாம் இவரது கதை.

2008-ல் அரவிந்த் அடிகா ”தி வைட் டைகர்” என்ற புத்தகத்திற்கு புக்கர் வாங்கினார். அரவிந்த் அடிகா நம்ம சென்னையில் பிறந்தவர்.அப்புறம் ஆஸ்த்ரேலியா போய்விட்டார். இவருக்கு இந்த புத்தகம் முதல் முழு நீள நாவலாம்.

முதல் நாவலிலேயே புக்கர் வாங்கறாங்க. இதில் கிரண் தேசாய், அரவிந்த் அடிகா இருவருக்கும் மிக நல்ல பல்கலைகழங்களில் ஆங்கில இலக்கியம் படித்த அனுபவம் உள்ளது.பிறந்தது இந்தியாதான், வளர்ந்தது எல்லாம் அயல் நாட்டிலே. ஆனால், கதையின் தளம் இந்தியாதான் இவர்களின் நூல்களில். வாழ்க இந்தியா..பரவட்டும் இந்தியாவின் புகழ்.


இது வரை இங்கிலாந்து 25 முறையும், ஆஸ்த்ரேலியா 6 முறையும், அயர்லேண்ட், இந்தியா 4 முறையும் இந்த புக்கரை தட்டி சென்று உள்ளன.

1 comment:

Unknown said...

பகிர்விற்கு நன்றி அமுதா கிருஷ்ணா.;))