Monday, December 07, 2009

4அரவிந்த்சாமியும்,4 மனிஷா கொய்ராலாவும்...

காஸர்கோட் அருகில் (16கிமீ)இருக்கும் பெக்கால் கோட்டைக்கு போன போது, பம்பாய் படத்தில் பார்த்து ரசித்த அந்த கோட்டை ரொம்ப சுத்தமாய் சுவர்களில் செடிகள் இல்லாமல் பச்சை குறைந்து காணப்பட்டது. 40ஏக்கர் பரப்பில் ஒரு பெரிய சாவி துவார வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையினை சிவப்ப நாயக்கர் என்பவர் கட்டியதாம். ஹைதர் அலி கைப்பற்றி பின்னர் திப்பு சுல்தான் வசம் வந்து பிரிட்டிஷாரிடம் இருந்து இன்று ஆர்கியலாஜிக்கல் துறையிடம் உள்ளது. இராணுவ தளவாடங்கள் பாதுகாக்கும் கிடங்காய் இருந்து இருக்கிறது. பெரிய படிகள் கீழே செல்கின்றன. ஆனால் வழிகள் பெரிய பூட்டினால் பூட்டப் பட்டிருக்கிறது. கடலுக்கு அருகில் 130அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோட்டையின் நடுவில் ஒரு பெரிய டவர் போன்ற அமைப்பு 30அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ளது. அதில் ஏறி பார்க்கும் போது மூன்று பக்கமும் கடல், ஒரு பக்கத்தில் புல்வெளி என்று இயற்கை அழகு. கோட்டையின் வெளியில் ஒரு ஹனுமான் கோயில் உள்ளது.


கடலுக்கு அருகில் இருக்கும் ஒரு பாறையில் நின்று தான் அரவிந்த் சாமி உயிரே உயிரே என்று பாட மனிஷா அங்கிருந்து ஓடி ஓடி வருவார் என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே புதியதாய் மணமான 4 ஜோடிகள் 4கேமிராமேன்களுடன் ஓடி,நடந்து,அமர்ந்து,நின்று என்று ஒரு சினிமா ஷீட்டிங் போல் காட்சிகளை சுட்டுக் கொண்டு இருந்தனர். பார்க்க தமாஷாய் இருந்தது. கூட்டம் வேறு இல்லை. எப்ப பார்த்தாலும் அந்த ஜோடிகள் தான் கண்ணில் பட்டனர். சரி என்று அந்த ஜோடிகளை அரவிந்த்,மனிஷாவாக பார்த்தோம்.

கோட்டையின் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கரா பீச் மிக அமைதியாய் குளிக்க ஏற்றதாய் இருக்கிறது. கோட்டை மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. போன மாதம் சென்னையில் ஊருக்கு நடுவில் இருக்கும் வள்ளுவர் கோட்டம் போன போது அய்யோ..நான் சொல்ல மாட்டேன். போய் பார்த்து கொள்ளுங்கள்.

காஸர்கோட் சென்னை மங்களூர் ட்ரைனில் போக வேண்டும். காஸர்கோடில் நல்ல தங்கும் விடுதிகள் உள்ளன.

2 comments:

வால்பையன் said...

//புதியதாய் மணமான 4 ஜோடிகள் //

இதுதான் தலைப்போட காரணமா!?

படங்கள் அருமை!

உங்கள் தோழி கிருத்திகா said...

thalaippai pathuttu uzhunthutten :)
nalla pathivi