Sunday, February 28, 2010

ஹயக்ரீவரிடம் சொல்லியாச்சு அவர் பார்த்துப்பார்..


திங்கள் கிழமையிலிருந்து +2 பரீட்சைகள் ஆரம்பம். என் அம்மா கேட்டு கொண்டதை அடுத்து சிங்கம்பெருமாள் அருகில் இருக்கும் செட்டிபுண்ணியம் கோயிலுக்கு +2 எழுத போகும் என் பையன் ரிஷியை கூட்டிக் கொண்டு இன்று காலையில் 6 மணிக்கே போனோம்.பேனா, பென்சில், ஹால் டிக்கெட் என்று கையில் வைத்துக் கொண்டு கோயிலில் ஒரே பசங்க கூட்ட்ம்.பெரிரிரிய கியூ.காரை விட்டு இறங்கியதுமே தெரிந்து விட்டது.2 மணிநேரமாவது ஆகும் தரிசனத்திற்கு என்று. நாங்கள் சீக்கிரம் வந்து விட்டதாய் நினைத்து இருந்தால். எங்களுக்கு முன்னாடி இவ்ளோ பேரா.

ஸ்பெஷல் (10 ரூபாய்) டிக்கெட் எடுத்து போனதால் அரைமணி நேரத்தில் அர்ச்சனை முடித்து வெளியில் வர முடிந்தது. கோயில் பிரகார சுவற்றில் எல்லாம் பரீட்சை நம்பரும், பெயரும் எழுதப் பட்டுள்ளது. இங்கு எழுதக் கூடாது என்று பெரிய எழுத்தில் எழுதி இருப்பதை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. குமுதம் ஜோதிடம் இதழில் இந்த கோயிலை பற்றி எழுதியதிலிருந்து இங்கு நல்ல கூட்டம். பரீட்சை சமயத்தில் கோயிலை சுத்தி இருக்கும் செட்டி புண்ணியம் கிராமம் ஜே ஜே என்று இருக்கிறது. கோயிலில் பெண்களை விட பையனகள் தான் அதிகம் இருந்தார்கள்.

சிங்கம் பெருமாள் கோயிலிருந்து 3 கிமீ மேற்கில் இந்த தேவனந்தஸ்வாமி கோயில் அமைந்து உள்ளது. 60சி தாம்பரத்திலிருந்து போகும் ஒரே பஸ் ஆகும். சிங்கம் பெருமாள் கோயில் பஸ் ஸ்டாண்டிலிருந்து போக வர ஆட்டோ கிடைக்கிறது. 350 வருட பழைமையான இந்த கோயிலின் கருவரையில் வரதராஜ பெருமாள் இருக்கிறார். ஹயக்ரீவரின் சிலை கடலூர் திருவஹிந்தபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. ஏலக்காய் மாலை இங்கு ஹயக்ரீவருக்கு சூடப்படுகிறது. லஷ்மி இல்லாமல் தனியே இங்கு இருக்கிறார் யோக ஹயக்ரீவர் என்பதால் இந்த கோயில் மிக விஷேசமாம். பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்து போன அரக்கர்களிடமிருந்து வேதங்களை மீட்க விஷணு இப்படி யோக ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தாராம்.

1 comment:

Muruganandan M.K. said...

350 வருட பழைமையான கோயில் பற்றிய தகவலுக்கு நன்றி