Thursday, October 31, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்

1. நான்:  தேவி,என்ன ஆள் எதுவும் மாட்டுச்சா?

தேவி : இல்லக்கா தேடிட்டே இருக்கேன். இது வரைக்கும் மாட்டலை.

நான்: தனியா வந்திருக்க ஆளாப்பாரு அவுங்க தான் கேட்டா ஒத்துக்குவாங்க..

தேவி : ஆமாக்கா அப்படிதான் கேட்டுட்டு இருக்கேன்.

நான்: கேளு, கேளு நானும் யாராவது மாட்டுறாங்களான்னு பாக்குறேன்.....

ஆஹா வேற ரூட்டுல்ல பேச்சு போற மாதிரி இருக்குதேன்னு திடீரென்று ஞானோதயம் வந்து சிரிச்சுட்டே பேச்சுக்கு ஒரு பெரிய புள்ளி வைத்தோம்.

மும்பை போன போது எங்களில் 3 பேர் ஒரு கோச்,4 பேர் இன்னொரு கோச் 2 பேருக்கு இன்னொரு கோச்.அதுவும் பக்கம் பக்கமாய் இடமில்லை. எனவே எங்களுடன் வந்த தேவி தனிதனியே வந்திருந்த ஆண்களாய் பார்த்து சீட் மாறி கொள்ள முடியுமா என்று கேட்டு கொண்டிருந்தார். நான் டிடிஆரை பார்த்து RAC சீட் கேட்க போன போது தான் மேலே உள்ள டயலாக்ஸ்.


2. மும்பையில் கடைக்காரர்கள் 1163 ரூபாய்க்கு பில் வருகிறது என்றால் நம் தமிழ்நாடென்றால் 3 ரூபாய் குறைத்து 1160 அல்லது 1150 ரூபாய் என்று ரவுண்டாக  வாங்கி கொள்வார்கள்.நான் சொல்வது மொத்த கடைகளில். ஆனால் மும்பையில் 3 ரூபாய் கூட குறைக்க மறுத்து விட்டார்கள். என்னுடன் வந்திருந்த ஒருவர் ஒவ்வொரு கடையிலும் அமொளண்ட்டை ரவுண்டாக்குங்க ரவுண்டாக்குங்க என்று தொண தொணவென்று கேட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கடைக்காரரிடம் பில்லை வாங்கி பேனாவால் அமெண்ட்டை சுற்றி ஒரு ரவுண்ட் வரைந்து கொடுத்து விட்டேன். அந்த கடைக்காரருக்கு ஒரே சிரிப்பு. அப்புறம் ரவுண்டாக்கி ஒரு தொகை வாங்கி கொண்டார்.

4. காலை வேளையில் மும்பை லோக்கல் ட்ரையினில் லேடிஸ் கோச்சில் பயணித்த போது கவனித்தது. அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ்,விரித்த முடி,லிப்ஸ்டிக் என்று இருக்கும் பெண் கூட கையில் சாமி ஸ்லோகம் புக் வைத்து கொண்டு முணுமுணுத்து கொண்டு இருந்தார்கள். மும்பையால் தான் ஹிந்துயிசம் வாழுகிறது என்று நினைத்து கொண்டேன்.

3. சென்னை திரும்பி வரும் போது சைட் பெர்த்தில் ஒரு அம்மா 45 வயதில்,ஒரு பையன் 21 வயதில் அப்புறமா ஒரு 3 மாத குழந்தை. அந்த பையனை பார்த்தா குழந்தைக்கு அப்பா மாதிரி தெரியலை.அந்த அம்மாவை அந்த 21 வயது பையன் மா,மா என்று வேறு அழைத்தான். குழந்தை வேறு ட்ரையின் ஏறியதில் இருந்து ஒரே அழுகை. தலையே வெடித்து விட்டது. அந்த பையனிடம் குழந்தை யாருன்னு கேட்டேன். தங்கை என்றான். ஆஹா அண்ணா தங்கைக்கிடையே இவ்ளோ கேப்பா இது புது மாதிரி இருக்கேன்னு ஙேன்னு நான் முழித்து கொண்டிருந்த போது இந்த பாப்பாவை அடாப்ட் செய்து இருக்கோம்  என்று சொன்னான். அவனின் சொந்த மாமாக்கு மூன்று பெண்களாம். நான்காவதாய் பிறந்த இந்த பெண் குழந்தையினை சென்னை செளகார்பேட்டையில் வளர்க்க ராஜஸ்தானில் இருந்து எடுத்து வருவதாக சொன்னான். அவனும் அவன் தம்பியும் பிடிவாதம் பிடித்து எடுத்து வருவதாக கூறினான். எங்க பிரின்சஸ் என்று அந்த குழந்தையினை ராப்பகலாய் தாங்கி கொண்டிருந்தான் காலேஜ் படிக்கும் அந்த பையன்...
வீட்டிற்கு வர சொல்லி அவுங்க அம்மா ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்தாங்க. உடைந்த தமிழில் பேசினார்கள். 21,18 என்று இரண்டு அண்ணாக்கள் அந்த குழந்தைக்கு. குழந்தை நிஜமாவே கொடுத்து வைச்சு இருக்கு.

.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல நொறுக்ஸ்... நன்றி...

இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

நம்பள்கி said...

நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

சுவையான சிப்ஸ்! நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!