Friday, April 11, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -2


அசத்துகிறான் - 1

முதலில் பையனா பிறந்ததால் தான் அவனுக்கு அப்படி ஆச்சு. இது பொண்ணா இருந்தா அந்த மாதிரி வரவே வராது.சயின்ஸ் படி அது சாத்தியமே இல்லை.xx,yy,xy,yx-ன்னு வரலாறு படித்த சயின்ஸ் பிடிக்கவே பிடிக்காத என்னை குழப்பினார்கள். அதுவுமில்லாமல் சமத்தா உன் பெரிய பையனை எப்படி வளர்த்து வர பாரு.அவன் தனியா இருப்பானா.நம்ம ஃபேமிலி எவ்ளோ பெரிசு பாரு.(என் கணவர் எட்டாவது குழந்தை) அவன் மட்டும் தனியாளா வளரணுமா அப்படி இப்படின்னு ப்ரையின் வாஷ் செய்து பயமுறுத்தி,போராடி என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.யாருமே என் கட்சியில் இல்லை.

                                                 
சரி நடப்பது நடக்கட்டும் என்று ஊருக்கும் ரிடர்ன் வந்துட்டேன். இங்கே வந்து 4வது மாதத்தில் ஸ்கேன் செய்தால் நீ அசையவே கூடாது..குழந்தை பொஸிஷன் சரியில்லை.நான் என் தம்பியுடன் ஸ்கேன் செண்டர் போயிருந்தேன். பெரியவுங்க யாரையும் அழைச்சுட்டு வரலையா என்று ஏகமா பயமுறுத்தினாங்க. ஆஹா அடுத்த யுத்தம் ஆரம்பமா போச்சுடான்னு வீட்டிற்கு எலக்ட்ரிக் ட்ரையின் ஏறி வந்தேன்.என்னோட அம்மா பயந்து போய் என்னை திண்டுக்கல்லிற்கே அனுப்பி விட்டார்கள்.அங்கே போய் ஸ்கேன் செய்து பார்த்தா அதே பல்லவி. சரியென்று வேலை எதும் செய்யாமல் ஜம்முன்னு டாக்டர் பார்ப்பது மட்டும் வேலைன்னு இருந்துக் கொண்டேன்.

                                     

மார்ச் 23 டேட் கொடுத்து இருந்தார்கள்.வலியே வராது ஆனாலும் ஹாஸ்பிட்டல் வந்துடுன்னு சொன்னதும் 22 தேதியே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனேன். 23 சிசேரியன் செய்துடலாம் என்று ப்ளான். எதுக்கும் 22 ஆம் தேதி இரவு ஒரு ஸ்கேன் செய்யலாம் என்று பார்த்தால் 9 மாதமாக பொஸிஷன் சரியில்லை சரியில்லை என்று இருந்த குழந்தையின் பொஸிஷன் அன்னைக்கு திடீரென்று சரியாகி விட்டது. மறுநாள் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். வலி வரும் அப்ப வா.சிசேரியன் வேண்டாம்னு.சரின்னு வீட்டிற்கு வந்தாச்சு.வலி வந்துச்சா,வரலை,வந்துச்சா,வரலை.இது சரிபட்டு வராதுன்னு ஏப்ரல் 9 ஆம் தேதி என் அம்மா ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிட்டாங்க.ஏப்ரல் 14-ல் சித்திரை பிறக்குமே அவுங்க கவலை அவுங்களுக்கு. வலி வர 9,10 ஆம் தேதி ட்ரிப் ஏத்தினாங்க.      
                                        

வலி வந்துச்சா வரலியே..............


No comments: