Monday, July 14, 2014

ரேஷன் கார்டை தொலைக்கப் போறீங்களா??

போன வருடம் ஜூலை மாதம் நான் காசி போனப்போது என் அம்மா சுகர் வாங்க பால்க்காரம்மாவிடம் கார்ட் கொடுத்து இருக்காங்க.முக்கிய குறிப்பு: கார்ட் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டு தான் போயிருந்தேன்!!!!
நான் திரும்பி வந்து எதுக்கோ எங்கடா கார்ட் காணோம்னு தேடினா எங்கம்மா+அந்தம்மா ஙேன்னு முழிக்கிறாங்க.

வாங்கி வந்த பையில் சுகர் இருக்கு கார்ட் காணாமப் போச்சு - ரேஷன் கடையில் ரிப்போர்ட் செய்தால் மண்டல அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய சொன்னாங்க. ரேஷன் கடையில் இருக்கும் ஒரு பெரிய நோட்டில் எங்களுக்கான பக்கத்தில் கார்ட் மிஸ்ஸிங்ன்னு எழுதிக்கிட்டார்.
கார்ட் காணாம போனா 3 மாசத்துக்கப்புறமா தான் ரிப்போர்ட்டணும்னு மண்டல அலுவலகத்தில்  சொன்னாங்க.

இப்படி கார்டு காணோம்னு ஒரு பேப்பரில் எழுதி அதில் ரேஷன் கடைக்காரர் கையெழுத்து வாங்கி, மூணு மாதத்திற்கு அப்புறமா நவம்பர் மாதம் ஒரு நல்ல நாளில் ரிப்போர்ட்டினோம்

ஒரு மாதங்கழித்து வந்து டூப்ளிகேட் கார்ட் வாங்கிக்கோங்கன்னு ஒரு குட்டியூண்டு பேப்பரில் எழுதி தந்தாங்க.அதை ரொம்ப பத்திரமா யார் கண்ணிலும் படாமல் வச்சிருந்து ஒரு மாதம்  கழிச்சு டிசம்பர் கடைசியில் போனா உங்க டூப்ளிகேட் கார்டு ஆஃபிசில் டெலிட் ஆகிப்போச்சு!!! நம்ம நேரம்.

எனவே,  புது கார்ட் வேணும்னு அப்ளிகேஷன் போடுங்கன்னாங்க.
அதை ஜனவரியில் போட்டோம்.எப்ப வேணா வீட்டுக்கு செக்கிங் வருவோம்னாங்க.  பகலில் வீட்டை பூட்டாம பார்த்துக்கிட்டோம். யாருமே வரவேயில்லை.
பிப்ரவரியில் நேரே போய் கேட்டாக்கா எலக்‌ஷன் டேட் வந்தா எப்ப புதுக்கார்ட் தருவோம்னு எங்களுக்கே தெரியாது.சும்மா இங்க வராதீங்க ஃபோன் செய்தா இங்கே வாங்கன்னு ”அன்பா”சொன்னாங்க.எலக்‌ஷன் டேட்டும் வந்தது. சரி எப்ப ஃபோன் வருதோ அப்ப போலாம்ன்னு அந்த ஏரியா பக்கமே போகலை. எலக்‌ஷனும் வந்து அதன் ரிசல்ட்டும் வந்தது ஆனா எங்களுக்கு ஃபோன் கால் வரவேயில்லை.

சரி ஆனது ஆகட்டும்னு தைரியத்தோடு இந்த ஜூலை 7ஆம் தேதி போய் விசாரித்தா உங்க ஃபோன் எப்ப பார்த்தாலும் நாட் ரீச்சபிள்னு வருது. நீங்களா கார்ட் வாங்க வர மாட்டீங்களா? உங்க கார்ட் மார்ச் மாதமே ரெடியாகிடுச்சுன்னு திரும்ப “அன்பா” சொன்னாங்க.நீங்க தான் எலக்‌ஷன் முடியுற வரை இங்கே வராதீங்கன்னு சொன்னீங்க.ஃபோனும் வரலை,வீட்டிற்கு விசாரணைக்கும் யாரும் வரலை சரி இப்ப நான் என்ன செய்யட்டும்னு கேட்டேன். சனி,ஞாயிறு தவிர மத்த நாட்களில் மதியம் 3-5 வந்து கார்டை வாங்கிக்கோங்கன்னு சொன்னாங்க. அப்பாடா..ஜூலை 11 ஆம் தேதி எங்கள் புத்தம் புதிய ரேஷன் கார்டில் எங்க பேரெல்லாம் இருக்கா, அட்ரஸ் கரெக்டா இருக்கா, எங்க வீட்டுத்தலைவர் ஃபோட்டோவை கரெக்டா போட்டிருக்கான்னு செக் செய்து வாங்கி வந்தேன். காணாம போய் கரெக்டா ஒரு வருடம் கழித்து புது கார்ட் கிடைச்சுருக்கு.

பழைய கார்ட்டின் ஜெராக்ஸ் காப்பி,தற்சமயம் வசிக்கும் வீட்டின் முகவரிக்கு சிலிண்டர் பில் இரண்டையும் இணைத்து புது கார்ட் அப்ளை செய்தோம்.

இவையெல்லாத்தையும் விட முக்கியம்
அதிக பொறுமை,  போனாப்போகுதுங்குற மனப்பான்மை,நினைவு சக்தி,அலைவதற்கு ரெடியா இருந்தா நீங்களும் ரேஷன் கார்டை காணாப்போடலாம்.

அம்மாகிட்ட கண்டிஷனா சொல்லிடணும் சுகர் வாங்க யார்கிட்டேயும் கொடுக்காதீங்க நானே வாங்கி தரேன்னு.


1 comment:

வெங்கட் நாகராஜ் said...

பெரிய போராட்டம் தான் இதற்கு.....

எப்படியோ கிடைத்து விட்டதே அதில் சந்தோஷம்.